என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    கோவில் விழாவில் 2 பெண்களிடம் நகை அபேஸ்- போலீசார் விசாரணை

    ராமநத்தம் அருகே கோவில் விழாவில் 2 பெண்களிடம் 8½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி அன்னக்கொடி (வயது 62), வாகையூரை சேர்ந்த ராமசாமி மனைவி கல்யாணி (55) ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் அன்னக்கொடியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையையும், கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகைகளையும் அபேஸ் செய்து சென்று விட்டனர். பறிபோன நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களிடம் நகையை அபேஸ் செய்து சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×