என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    விருதுநகரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் சங்கர பாண்டியபுரம் புதுத் தெருவை சேர்ந்தவர்  ராஜேந்திரகுமார்(வயது34). இவரது மனைவி ஆண்டாள் பிரியதர்ஷினி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    ராஜேந்திரகுமார் அதே பகுதியில் உள்ள விசைத்தறிகூடத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டாள் பிரியதர்ஷினி மகனுடன் தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் தனிமையில் இருந்த ராஜேந்திரகுமார் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை சமரசம் பேசி அழைத் துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரி கிறது.

    இதனால் விரக்தி அடைந்த ராஜேந்திரகுமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

     இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×