என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
டிப்பர் லாரி மோதி முதியவர் பலி
கொடுமுடி அருகே டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி அருகே நாகப்பாளையம் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (70).
இவர் இன்று காலை ஒத்தக்கடையில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் வேகத்தடை அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி பொன்னுச்சாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பொன்னுச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடுமுடி இன்ஸ் பெக்டர் முருகன் இறந்த பொன்னுச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற டிப்பர் லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story






