search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்.
    X
    விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்.

    விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கல்

    மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்கீழ் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அண்டமி நெம்மேலி, பாவாஜி கோட்டை, ஓலையகுன்னம், கன்னியாகுறிச்சி, புளியங்குடி மற்றும் வேப்பங்குளம் கிராமங்களை சேர்ந்த 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வேளாண் துறையின் மூலம் ரூ.5000 மானியத்தில் இடுபொருட்கள், தோட்டக்கலைத் துறையின் மூலம் மாங்கன்று, பலா கன்று, எலுமிச்சை, கொய்யா போன்ற பழக் கன்றுகள் ரூ.660 மானியத்திலும் வேளாண் உதவி இயக்குனரால் வழங்கப்பட்டது.

    மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட ஒரு கறவை மாடு மற்றும் 10 ஆடுகளுக்கு தேவையான கோ 29 புல் விதைகள் இரண்டரை கிலோவும் வேலிமசால் விதைகள் தலா ஒரு கிலோவும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பசுத்தீவனங்களை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் நாமக்கல் கேவிகே இல் இருந்து பெற்று வழங்கப்பட்டது.

    மேலும் தமிழ்நாடு பசுமை பரவலாக்க திட்டத்தின் மூலம் இத்திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் தலா 20 தேக்கு கன்றுகள் வேளாண் அலுவலர் சாந்தி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன், வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு கார்த்திக் சுரேஷ் மற்றும் தினேஷ் மதுக்கூர் கண்காணிப்பாளர் மதியழகன் ஆகியோரால் வழங்கப்பட்டது.இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு மேலும் 2 தேனி பெட்டிகள் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் விதைகளும் உள்ளிட்ட மொத்தம் மானியம் தலா ரூ.45 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு திட்டம் அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×