என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனிப்படை போலீசார்களை பாராட்டி எஸ்.பி. சுகுணாசிங் சான்றிதழ்கள் வழங்கினார்.
தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
மயிலாடுதுறை அருகே இளம்பெண் இறந்த வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே கடந்த 25ம் தேதி அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் காயத்துடன் இறந்து கிடந்தார்.
மயிலாடுதுறை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்&இன்ஸ் பெக்டர் இளையராஜா உள்ளிட்ட 7 பேர், அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. அடையாளம் தெரியாத இளம்பெண் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய நிலையில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்ததில் நீடூர் பி.எம் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜன் மகன் ஐயப்பன் (27) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் இறந்த இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
மனைவி இறந்த நிலையில் குழந்தையுடன் வசிக்கும் ஐயப்பன், சிறுமியுடன் பழகி வந்துள்ளார். மகனை விடுதியில் சேர்த்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஐயப்பனை வற்புறுத்தி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து சிறுமி மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததும் தெரிய வந்தது.
3 நாட்களில் குற்ற வாளியை பிடித்த தனிப்படை போலீசாரை அலுவல கத்திற்கு வரவழைத்து பாராட்டிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
Next Story






