என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

    கவுந்தப்பாடி ஆற்றுப்பாலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:


    கவுந்தப்பாடி ஆற்றுப்பாலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் தண்ணீர் பந்தல்பாளையம் தங்கமேடு மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாறன். இவரது மனைவி மரகதம். இவர்களது மகன் ஆனந்த குமார் (27). தொழிலாளி.

    ஆனந்தகுமாருக்கும், தங்கமணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவன் -மனைவி இருவரும் மணியகாரன் பாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 
    தங்கமணி அயலூரில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன்&மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இரவு  கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலம் ஆற்றுப்பாலத்திற்கும் மேற்கு புறத்தில் கோவிந் தராஜ் தோட்டத்திற்கு அருகே ஆற்றங்கரையில் ஆனந்தகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    இதுகுறித்து கவுந்தபாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமார் எதற்காக இறந்தார் என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் மரகதத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மரகதம் தனது குடும்பத்தாருடன் கவுந்தபாடி அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் ஆனந்தகுமார் பெற்றோர் தங்களது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×