என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கடலூர் முதுநகரில் பள்ளிக்கு சென்ற 11-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்

    கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வராத மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவி நேற்று வழக்கம்போல் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார். ஆனால் மாலை வீட்டிற்கு பள்ளி மாணவி வரவில்லை.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வராத மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×