search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    குளியலறையில் இறந்து கிடந்த வடமாநில வாலிபர்

    சென்னிமலை அருகே குளியலறையில் வடமாநில வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னிமலை அருகே குளியலறையில் வடமாநில வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் நவடா பகுதியை சேர்ந்தவர் அனில் யாதவ் (வயது38). சென்னிமலை& ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் கடந்த 10 மாதமாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அனில் யாதவ் குளிப்பதற்காக குளியலறை சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது நண்பர் சந்தேகம் அடைந்து குளியலறை கதவை தட்டியுள்ளார். 

    ஆனால் பதில் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனில்யாதவ் பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனில்யாதவ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    அனில் யாதவ் குளிக்கும் போது வழுக்கி விழுந்து இறந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×