என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளியலறையில் இறந்து கிடந்த வடமாநில வாலிபர்
Byமாலை மலர்1 March 2022 9:28 AM GMT (Updated: 1 March 2022 9:28 AM GMT)
சென்னிமலை அருகே குளியலறையில் வடமாநில வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சென்னிமலை அருகே குளியலறையில் வடமாநில வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் நவடா பகுதியை சேர்ந்தவர் அனில் யாதவ் (வயது38). சென்னிமலை& ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் கடந்த 10 மாதமாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அனில் யாதவ் குளிப்பதற்காக குளியலறை சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது நண்பர் சந்தேகம் அடைந்து குளியலறை கதவை தட்டியுள்ளார்.
ஆனால் பதில் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனில்யாதவ் பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனில்யாதவ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனில் யாதவ் குளிக்கும் போது வழுக்கி விழுந்து இறந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X