என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
இதில், கடத்தூர் கொத்துகாடு பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி மணியாள்(48) என்பவரை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மலையம்பாளையம் சந்தை பகுதியில் மது விற்றதாக கணேசன்(46) என்பவரை போலீசார் கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அம்மாபேட்டை குதிரைக்கால்மேடு பகுதியில் மது விற்றதாக அதேபகுதியை சேர்ந்த கந்தன்(60) என்பவரை போலீசார் கைது செய்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், தாளவாடி திகினாரையில் கர்நாடகா மது விற்றதாக தொட்டகாஜனூரை சேர்ந்த சிட்டாபா(60) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






