என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

    கிருஷ்ணகிரி மாட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார்மோதி வாலிபர் பலினயார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள வேடர்தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது  மகன் சரவணன் (வயது24). இவர் நேற்று காவேரிப்பட்டணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது வேலம்பட்டி என்ற இடத்தில் செல்லும் போது அந்த வழியாக எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  

    இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

    Next Story
    ×