என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இடையே வழக்கம் போல் ரெயில்கள் இயங்கும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்27 Feb 2022 9:29 AM GMT (Updated: 27 Feb 2022 9:29 AM GMT)
நிர்வாக காரணங்களுக்காக இரட்டை ரெயில் பாதை பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை:
வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடை பெற இருப்பதாக திட்டமிடப் பட்டிருந்தது.
இதன் காரணமாக திருச்சி-திருவனந்தபுரம், - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில் (22627/22628), தாம்பரம்-நாகர்கோவில், தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில் (16191/16192) மற்றும் புதுச்சேரி- கன்னியாகுமரி, புதுச்சேரி வாராந்திர விரைவு ரெயில் (16861/16862) ஆகியவை மார்ச் 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு நெல்லை வரை மட்டுமே இயக்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நிர்வாகக் காரணங்களுக்காக தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
எனவே திருச்சி-திருவனந்தபுரம், -திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில், தாம்பரம் -நாகர்கோவில், தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில் மற்றும் புதுச்சேரி- கன்னியாகுமரி, புதுச்சேரி வாராந்திர விரைவு ரெயில் ஆகியவை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.
இத்தகவல் மதுரை தெற்கு ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடை பெற இருப்பதாக திட்டமிடப் பட்டிருந்தது.
இதன் காரணமாக திருச்சி-திருவனந்தபுரம், - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில் (22627/22628), தாம்பரம்-நாகர்கோவில், தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில் (16191/16192) மற்றும் புதுச்சேரி- கன்னியாகுமரி, புதுச்சேரி வாராந்திர விரைவு ரெயில் (16861/16862) ஆகியவை மார்ச் 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு நெல்லை வரை மட்டுமே இயக்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நிர்வாகக் காரணங்களுக்காக தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
எனவே திருச்சி-திருவனந்தபுரம், -திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில், தாம்பரம் -நாகர்கோவில், தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில் மற்றும் புதுச்சேரி- கன்னியாகுமரி, புதுச்சேரி வாராந்திர விரைவு ரெயில் ஆகியவை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.
இத்தகவல் மதுரை தெற்கு ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X