என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
படிக்கும் போதே மாணவர் மத்தியில் தொழில்முனைவோர் சிந்தனை மேலோங்க வேண்டும் தொழில்மைய மேலாளர் அறிவுறுத்தல்
Byமாலை மலர்27 Feb 2022 6:10 AM GMT (Updated: 27 Feb 2022 6:10 AM GMT)
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும், பொருளாதார சமச்சீர் நிலையை எட்டுவதற்கும் குறு, சிறு நிறுவனங்கள் கைகொடுக்கின்றன.
திருப்பூர்:
திருப்பூர் முதலிபாளையம் 'நிப்ட் -டீ' கல்லூரியில், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு பயிற்சி மைய இணை இயக்குனர் பழனிவேல் பேசுகையில்,
''நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. மொத்த தொழில் நிறுவனங்களில் 90 சதவீதம் குறு, சிறு தொழில்களாகும்.
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும், பொருளாதார சமச்சீர் நிலையை எட்டுவதற்கும் குறு, சிறு நிறுவனங்கள் கைகொடுக்கின்றன.
உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு 'ஸ்கில் இந்தியா' திட்டங்களை செயல்படுத்தி வருகிறது'' என்றார்.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கண்ணன் பேசுகையில்,
''ஒருநாட்டின் வளர்ச்சியில் தொழில்முனைவோரின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில், படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைப்பது சாத்தியமில்லாததாக உள்ளது.
எனவே, படிக்கும்போதே மாணவர்கள், தொழில்முனைவோராகவேண்டும் என்கிற சிந்தனையை மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும். தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் மன திடம் மிகவும் முக்கியம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X