என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சிதம்பரம் நடராஜர் கோவில் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய முறையிலேயே தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சிதம்பரம்:
கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சிற்றம்பல மேடையில் ஏறி சாமியை தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது அரசு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் சிற்றம்பலமேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்த தீட்சிதர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
இதேபோல பெண் ஒருவர் தந்த புகாரின்பேரில் 20 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய முறையிலேயே தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சிற்றம்பல மேடையில் ஏறி சாமியை தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது அரசு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் சிற்றம்பலமேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்த தீட்சிதர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
இதேபோல பெண் ஒருவர் தந்த புகாரின்பேரில் 20 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய முறையிலேயே தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
Next Story






