என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீடு புகுந்து மர்ம நபர்கள் விரட்டியதில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

    வீடு புகுந்து மர்ம நபர்கள் விரட்டியதில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    காரைக்கால்:

    காரைக்கால் பெசன்ட் நகரை சேர்ந்தவர் ஹாஜாகுத் புதீன். இவரது மகள் சகினா சோபி (வயது24). இவரது பெற்றோர் பிரான்சில் இருப்பதால், அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சகினாசோபியின் பள்ளிக்கால தோழி ஷெரீன்.

    இவர் தற்போது கோவையில் உள்ளார். தோழி ஷெரீன் கேட்டுக்கொண்டதின் பேரில், காரைக்கால் நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு சகினாசோபி தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் வாட்ஸ் அப்பில் பேசிவந்துள்ளனர். சம்பவத்தன்று சகினா சோபியின் வீட்டிற்குள், திடீரென மர்ம நபர்கள் சிலர் நுழைந்து, சகினாசோபியை தாக்கி, செல்போனை பிடுங்க முயன்றனர். அப்போது சகினாசோபி பயந்து ஓடியதில் முதல் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உள்ளார். இதில் அவருக்கு காயம் ரிற்பட்டது.

    உடனே உறவினர்கள் சகினாசோபியை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×