என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு பதிவு
கடலூர் அருகே இருதரப்பினர் மோதல்- 4 பேர் மீது வழக்கு
கடலூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு கீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி ஜெயா (வயது 50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் குமரன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று ஜெயா வீடு அருகே கரும்பு சோகையை வடிவேல் குமரன் வீசினார். இதன் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் ஜெயா காயமடைந்தார்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வடிவேல் குமரன், ஜெயா, ஜனார்த்தனன், தனசுந்தரி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story






