என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
Byமாலை மலர்26 Feb 2022 7:54 AM GMT (Updated: 26 Feb 2022 7:54 AM GMT)
புங்கனூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமை ஊராட்சிமன்ற தலைவர் ஜூனைதா பேகம் தொடங்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
முகாமில் பொது மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, மற்றும் குழந்தைகள் தடுப்பூசி கொரோனா தடுப்பூசி மற்றும் சித்த மருத்துவ பிரிவில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் டாக்டர்கள் சம்பத்குமார், ஜாஸ்மின், சித்த மருத்துவர் டாக்டர் பொம்மி, சுகாதார செவிலியர்கள் அருள்ஜோதி, மரகதம் மற்றும் ஆய்வக நுட்பனர் கல்யாணம் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன், சுகாதார ஆய்வாளர் விக்னேஷ், வஜீருதீன் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம செயலாளர் சத்தியமூர்த்தி பவன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X