என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக 23.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட 2022 -ந் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின் படி வருகிற 2022 பிப்ரவரி 23-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி.தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக 23.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

    அதனை தொடர்ந்து இத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 02.03.2022 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகளாக மதியம் 02.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04142290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×