search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் மரணம்
    X
    வாலிபர் மரணம்

    மதுரவாயலில் வீட்டில் இருந்த வாலிபர் ‘திடீர்’ மரணம்

    மதுரவாயலில் வீட்டில் இருந்த வாலிபர் ‘திடீர்’ மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் மணிகண்டன் (வயது30) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மணிகண்டனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர். மணிகண்டனை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது திடீர் சாவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×