search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மொபட்டில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் சாவு

    மோகனூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் பரிதாபாக உயிரிழந்தார்.
    மோகனூர்:

    மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 48). ஜோதிடர். இவர் சம்பவத்தன்று காட்டுப்புத்தூருக்கு ஜோதிடம் பார்க்க சென்று விட்டு இரவு தனது மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஒருவந்தூர் பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, மொபட் நிலை தடுமாறியதில் நடராஜன் கீசூழ விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×