என் மலர்
உள்ளூர் செய்திகள்

உயிரிழப்பு
கடலூர் அருகே சாலையில் மயங்கிய கிடந்த காவலாளி திடீர் உயிரிழப்பு
கடலூர் அருகே சாலையில் மயங்கிய கிடந்த காவலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 58). இவர் புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் தனியார் கம்பெனியில்காவலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கடலூர் புதுச்சேரி சாலை சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மயங்கிய நிலையில் சாலையில் விழுந்து கிடந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவருடைய மகன் முருகதாசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் முருகதாஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தந்தை கண்ணதாசன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 58). இவர் புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் தனியார் கம்பெனியில்காவலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கடலூர் புதுச்சேரி சாலை சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் மயங்கிய நிலையில் சாலையில் விழுந்து கிடந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவருடைய மகன் முருகதாசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் முருகதாஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தந்தை கண்ணதாசன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






