என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் யூனியன் முகாமில் பட்டா திருத்தி வழங்கப்பட்டது.
பட்டா கணினி திருத்த முகாம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-, எஸ்.புதூர் ஒன்றியங்களில் பட்டா கணினி திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் உத்தரவுக்கு இணங்க வருவாய்த்துறையினரால் பட்டா கணினி திருத்தம் முகாம் புதன் மற்றும் வெள்ளிகிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தானிப்பட்டி கிராமத்திலும், எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாந்தங்குடிபட்டி கிராமத்திலும் கணினி முகாம் நடைபெற்றது.
முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டும், விசாரணை கூறிய மனுக்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரினால் சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடம் நேரடியாக விசா ரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, தலைமை நிலஅளவர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் இளையராஜா, ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Next Story






