என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கபட்டது.
சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வலியுறுத்தல்
சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்று இந்து புரட்சி முன்னணி அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரில் இந்து புரட்சி முன்னணி அமைப்பின் அறிமுக விழா, பொறுப்பாளர் அறிமுக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜோதிகுமரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், இந்து புரட்சி முன்னணி நிறுவனத் தலைவர் சந்திரகுமார், மாநில பொதுச்செயலாளர் வளசை.பிரியா, பாரதமாதா ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழாக்குழு நிறுவனர் ராமலிங்கம், இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு எழுது உபகரணங்களையும், பொதுமக்களுக்கு நலஉதவிகளையும் வழங்கினர்.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் அறநிலையத் துறை சொத்துக்களை பாதுகாக்க சீப் விஜிலன்ஸ் ஆபிசரை நியமிக்க வேண்டும்,
சிலை பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள உலோகச் சிலைகளை உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






