என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ரெயில் பயணியிடம் மடிக்கணினியை திருடிய வடமாநில வாலிபர்
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினியை திருடிய வடமாநில வாலிபரை ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினியை திருடிய வடமாநில வாலிபரை ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்
கரூர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரின் மடிக்கணினி, ரூ.600 பணம் மற்றும் மருந்து தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை வாலிபர் ஒருவர் திருடிக் கொண்டு சென்றுவிட்டார்.
இது குறித்து அந்த பயணி கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் கரூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயில் நிலையத்தில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் மடிக்கணினி உடன் மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேகமாக ஏறியது பதிவாகியிருந்தது. அந்த ரெயில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை சப்&இன்ஸ்பெக்டர் நிஷாந்த் தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்தது.
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.
அப்போது டி-2 பெட்டியல் சோதனை செய்தபோது ஒரு வாலிபரிடம் இருந்து மடிக்கணினி, ரூ.600, சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்மென்தி ராஜ்குமார் அக்ரஹரி (36) என தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கரூருக்கு அழைத்துச் சென்று ரெயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story






