என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்.
    X
    பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்.

    வீட்டில் சாராயம் பதுக்கிய பெண் கைது

    வேதாரண்யம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்: 

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் ஈஸ்வரி என்பவரது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கிவைக்கபட்டு இருந்த 3 லட்சம் மதிப்பு 2800 குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    பின்பு, அதனை பறிமுதல் செய்த போலீசார் சாராய பதுக்கி வியாபாரம் செய்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்தனர்.

    வீட்டில் பதுக்கி சாராயம் விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×