என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31-ந்தேதி கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 21-ந்தேதி சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
    Next Story
    ×