search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சிதம்பரம் அருகே தனியார் பஸ்-கார் மோதல்: மருத்துவ பணியாளர் பலி

    சிதம்பரம் அருகே தனியார் பஸ் மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் மருத்துவ பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    சென்னை பரணிபுத்தூர் ஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 31). இவரது அண்ணன் இளையராஜா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்கள் சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த பூபதி (33), செனாய் நகரை சேர்ந்த நவீன்(36) , வியாசர்பாடியை சேர்ந்த நாகராஜன் (47), பரங்கிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (30) ஆகியோருடன் சென்னையிலிருந்து சீர்காழி நோக்கி காரில் சென்றனர்.

    புதுசத்திரம் பஸ் நிலையம் அருகே சென்ற போது எதிரே தனியார் பஸ் வந்தது. இந்த பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த ராஜி உட்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×