search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தண்ணீரில் நீந்தி செல்லும் பறவை.
    X
    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தண்ணீரில் நீந்தி செல்லும் பறவை.

    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 23 ஆயிரம் பறவைகள்

    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 23 ஆயிரம் பறவைகள் உள்ளதாக பறவைகள் கணெக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னிமலை:

    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 23 ஆயிரம் பறவைகள் உள்ளதாக பறவைகள் கணெக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை  அருகே உள்ள வெள்ளோடு அடுத்த வி.மேட்டுப்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள் ளது. 

    இங்கு வெளி நாட்டு பறவைகள் உள்பட பல்வேறு பறவைகள் உள்ளது. மேலும் பல்வேறு விதமான புது வகை பறவைகளும் இந்த பகுதிக்கு வந்து செல்கிறது.

    இந்த பறவைகள் சரணாலயம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த சரணாலயத்தில் வலசை காலமான அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பற வைகள் அதிக அளவில் வந்து செல்கிறது.

    இந்த நிலையில் இந்த  பறவைகள் சரணாலயத்தில் கடந்த சில நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 

    இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம், வனச்சரகர் ரவீந்திரநாத்,வனவர் பாரதி, வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர் .

    இங்கு வெளி நாட்டு பறவைகள் எத்தனை உள்ளன. எந்த வகை பறவைகள் அதிகளவில் உள்ளன. 

    மேலும் அதிசய பற வைகள் இங்கு வந்துள்ளதா? என்பது குறித் தும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆய்வு செய்தனர். 

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. 

    இதில்  பெலிகான், அரிவால் மூக்கன், உப்பு கொத்தி, பண்ணை நாரை, கொக்கு, பஞ்சுட்டான், ஆந்தை, உட்பட உள்நாடு,வெளிநாட்டு பறவைகள் என 121&க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. 

    இங்கு 23 ஆயிரம் பறவைகள் இருக்காலம் என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×