என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சென்டர் மீடியனில் கார் மோதி பெண் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி பெண் பலியானார்.
காவேரிப்பட்டணம்:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திருமால் நகர் எக்ஸ்டன்சன் வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் அசோகன் (வயது 70).
இவர், இவரது மனைவி பிரேமா (60), மகன் சண்முகம் ஆனந்த் (34) ஆகியோர் காரில், தருமபுரி&கிருஷ்ணகிரி சாலையில் காவேரிப் பட்டணம் அருகே பையூர் பக்கமாக கடந்த 16-ந் தேதி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காரை அசோகன் ஓட்டி வந்தார். அந்த நேரம் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த அசோகன், பிரேமா, சண்முகம் ஆனந்த் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதில் பிரேமா சிகிச்சை பலனின்றி இறந்தார். அசோகனும், சண்முகம் ஆனந்த்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






