என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் முதல் வாக்கினை பதிவு செய்த இளம் பெண்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் முதல் வாக்கினை பதிவு செய்த இளம் பெண்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் முதல் வாக்கினை பதிவு செய்த இளம் பெண்கள் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டோம் என உற்சாகமுடன் தெரிவித்தனர்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் முதல் வாக்கினை பதிவு செய்த இளம் பெண்கள் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டோம் என உற்சாகமுடன் தெரிவித்தனர்.
ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளில் 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாநகர் பகுதியில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 434 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குபதிவு தொடங்கியதும் பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசை யில் நின்று வாக்குப்பதிவை பதிவு செய்து வருகின்றனர்.
இளம் தலைமுறையினர் அதாவது முதல் வாக்குப் பதிவை பெற்ற இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்று காலை ஆர்வத்துடன் வந்து தங்களது முதல் வாக்கினை பதிவு செய்தனர்.
குறிப்பாக கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடன் வந்து தங்களது முதல் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
ஈரோடு குமலன் குட்டை வாக்குச்சாவடி மையத்தில் தங்களது முதல் வாக்கினை பதிவு செய்து வந்த இளம்பெண்கள் தேர்தல் குறித்து கூறியதாவது:-
நாங்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று வாக்காளர் அடையாள அட்டையை பெற்றோம்.
இப்போது இன்று எங்களது முதல் வாக்கினை பதிவு செய்துள்ளோம்.
முதன் முதலாக எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளோம்.
இளம் தலைமுறையாக நாங்கள் மாற்றத்தை விரும்பி யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு திட்டங்கள் வந்து சேரும் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களித்து உள்ளோம். முதன் முதலாக வாக்களித்த அனுபவம் புதுமையாக இருந்தது.
இனி நடக்கும் தேர்தலில் தவறாமல் எங்களது ஜனநாயக கடமை ஆற்றுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






