search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.கே.வி. ரோடு சாலை வெறிச்சோடியது.
    X
    ஆர்.கே.வி. ரோடு சாலை வெறிச்சோடியது.

    உள்ளாட்சித் தேர்தல்:சாலைகள் வெறிச்சோடியது

    உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடடில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்களிலும் மக்கள் கூட்டமின்றியே காணப்பட்டது.
    ஈரோடு:

    உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடடில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்களிலும் மக்கள் கூட்டமின்றியே காணப்பட்டது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை முதல்  விறு விறுப்பாக நடந்து வருகிறது. பொது மக்கள் வாக்களிக்கும் வசதியாக அரசு  அலுவலகங்கள், பள்ளி மற்றும்  கல்லூரி களுக்கு விடு முறை அளிக்கப் பட்டது. 

    இதேபோல் பெரிய மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், கடைகளுக்கும் இன்று சம் பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு அறிவித்து இருந் தது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

    இதன் காரணமாக இன்று ஈரோடு ஆர்.கே.வி. ரோடு, ஈ.வி.என் ரோடு, மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பார்க் பகுதி உள்பட முக்கிய பகுதிகளில் உள்ள 100-க் கணக்கான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. 

    இதனால் அந்த பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப் பட்டது. ஆனால் அதே நேரம் அத்தியா வசியப் பொருட் களுக்கான பால், மருந்த கங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

    மேலும் ஈரோடு பஸ் நிலையம் பகுதியும் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. வெளியூர் செல்லும் பஸ்களிலும் குறைந்த பயணிகளே சென்று வந்தனர்.

    இதே போல் ஒரு சில பேக்கரி கடை, டீ கடைகளும் திறந்திருந்தன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  இன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×