என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    தேர்தல் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேர்தல் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேர்தல் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று  இணை இயக்குனர்  தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார  இணை இயக்குனர் வினோத் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
     
    தமிழகத்தில் நகர்ப்புற பகுதி களுக்கான உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக் கிழமை) நடக்கிறது. 

    அன்றைய தினம் தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அவற்றில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண் டும் என தமிழக அரசு உத்திர விட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடை பெறும் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தங்களது தொழிற்சாலைகளில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான நாளை (சனிக்கிழமை) ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.  

    அவ்வாறு ஊதியத்துடன் விடுப்பு வழங்காவிட்டால் தொழிசாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

    எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்த விதமான புகார்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×