என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிணமாக மீட்கப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் முனியக்கவுண்டர்.
காவிரி ஆற்றில் குளித்த போது மாயமான அ.தி.மு.க. பிரமுகர் பிணமாக மீட்பு
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளித்த போது மாயமான அ.தி.மு.க. பிரமுகர் பிணமாக மீட்கப்பட்டார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குளித்த போது மாயமான அ.தி.மு.க. பிரமுகர் பிணமாக மீட்கப்பட்டார்.
அம்மாபேட்டை 15-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் மங்கனன் என்கிற முனிய கவுண்டர் (64). இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் வேலையை முடித்து பாரதியார் வீதியில் வீட்டருகே உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார். சிறிது தூரம் சென்றதும் திடீரென கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் திடீரென சத்தம் கேட்கவில்லை. அதன் பின் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தேடினர். பிறகு அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தியூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜேசுதாஸ் தலைமையில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மாலை இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.ஆனால் அவரது உடல் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால் இன்று 2&வது நாளாக முனிய கவுண்டரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் அம்மாபேட்டை -கோனேரிப்பட்டி கதவணை மின்நிலையம் &3 வரை ஆங்காங்கே முனிய கவுண்டரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் படித்துறை அருகே முனியக்கவுண்டர் உடல் பிணமாக மிதந்து வந்தது. இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






