search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    மாமல்லபுரம் கடற்கரையில் ஆண் பிணம்- கொலையா?

    மாமல்லபுரம் கடற்கரையில் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் அருகே கடற்கரையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. பிணமாக கிடந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும்.

    அவரை யாரேனும் கடத்தி கொலை செய்து வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    Next Story
    ×