என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்வு
ஆசிரியர் தேர்வுக்கான மையம் மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வுக்கான மையம் மாற்றப்பட்டு உள்ளது.
விருதுநகர்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ள தேர்வு மையத்தை முறையாக அறிந்து உரிய நேரத்தில் சென்று தேர்வர்கள் தேர்வு எழுதுமாறு விருதுநகர் மாவட்ட தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை முதல் கட்டமாகவும், 16ந்தேதி முதல் 18ந்தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், முதுகலை ஆசிரியர்கள், கணிணி பயிற்றுநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 நேரடி நியமனம் சார்பான கணினி வழியான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இதில் காரியாபட்டி, புல்லூர், சேது பொறியியல் கல்லூரியில் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் நடைபெற இருந்த கணிணிவழி தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக வேறு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுத உள்ள அனைத்து தேர்வர்களும் ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வர்களின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மற்றும் Voice Message, தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரியில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் சார்பான விபரத்தினை மீண்டும் சரிபார்த்து அறிந்து, அதற்குரிய Admit Card - ஐ பதிவிறக்கம் செய்து புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்று தேர்வு எழுத விருதுநகர் மாவட்ட தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
Next Story






