என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் போலீசாருக்கு பணி உத்தரவு

    உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் போலீசாருக்கு பணி உத்தரவு வழங்கபட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 18-ந் தேதியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் போலீசாருக்கு பணி உத்தரவு வழங்கபட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 18-ந் தேதியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் 1,798 போலீசார், 260 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தலில் பணிபுரியும் இடத்திற்கு ஆணை வழங்கும் பணி அந்தந்த போலீஸ் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

    தேர்தலின் போது எந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஒவ்வொரு போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டு அதற்கான பணி ஆணை வழங்கும் பணி நடந்து வருகிறது. 18-ந் தேதி காலை ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த போலீசார் செல்ல வேண்டும்.

    தேர்தல் முடிந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சேர்த்த பின் வீடு திரும்ப வேண்டும். இதே போல் நடமாடும் கண்காணிப்பு குழுவினர் 19-ந் தேதி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு செல்வார்கள். இவர்களுக்கு பெரும் பாலும் அந்தந்த பகுதியிலேயே பணி வழங்கப் பட்டுள்ளது. 

    ஆனால் ஓட்டு பதிவுடன் சட்டம் ஒழுங்கு பணி யையும் பார்க்க வேண்டும். இதனால் தான் சப்-டிவிஷன்  உட்பட்ட பகுதியிலேயே அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை போலீசார் தேவையான அளவு மட்டும் பணிக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.
    இவ்வாறு அவர்கள் கூறி னர்.
    Next Story
    ×