என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாக்குசாவடிகள் தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து வாக்குசாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து வாக்குசாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட் டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி,  புளியம்பட்டி நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டு களுக்கும், நகராட்சி களில் 102 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 610 வார்டுகள் என 771 வார்டு களுக்கு தேர்தல் நடை பெற உள்ளது. இதில் மாநகராட்சியில் 59 வார்டுகளில் 352 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

    பவானி, கோபி, சத்திய மங்கலம், புளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் 453 பேரும், 42 பேரூராட்சிகளில் 1919 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 771 பதவிகளுக்கு 2724 வேட் பாளர்கள் போட்டியிட்டுள் ளனர். கடந்த 10 நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரம் மேற் கொண்டுள்ளனர். இதனிடையே நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதையடுத்து இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் வேட் பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பணப் பட்டுவாடா செய் வதை தடுக்க பறக்கும் படைகள் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.  மாவட் டத்தில் மொத்தம் 1251 வாக்கு சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. 

    முறைகேடுகளை கண்காணிக்க 55 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வாக்குசாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    நாளை மறுநாள் 18-ந் தேதி காலை 10 மணி முதல் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குசாவடி மையங் களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதால் வாக்குசாவடிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி உத்தர விட்டுள்ளார்.

    Next Story
    ×