என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் 148 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்
ஈரோடு மாநகராட்சி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 148 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 148 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி, 59 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற, 19&ந் தேதி நடத்தப்பட்டு, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
வருகிற, 22-ந் தேதி அங்கேயே ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக, ஓட்டுப்பெட்டிகள் வைப்பு அறை மூன்று தயார் செய்யப்பட்டுள்ளன. அதன் அருகே மூன்று அறைகளில் தலா, 14 மேஜைகள் வீதம் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மூன்று அறைகளிலும் சுவரை ஒட்டிய பகுதியில் வேட்பாளர்களின் முகவர்கள் அமரவும், அதனை அடுத்து, கட்டை, கம்பி மூலமாக தடுப்பு வேலி அமைத்து, உள்ளே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
இங்கு ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கேமிரா என, மூன்று அறைகளில் தலா, 14 கேமிராவும், ஒவ்வொரு அறையிலும் ஒட்டு மொத்த அறையையும் கண்காணிக்கும் வகையில் கேமராவும் அமைக்கப்பட்டது.
தவிர, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் வைக்கும் அறை, அங்கிருந்து எந்திரங்கள் கொண்ட பெட்டியை எடுத்து வரும் பாதைகள், அவ்வளாகம் என, 148 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தினர். அவற்றை அங்கேயும், மாநகராட்சி கமிஷ்னர் அறை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து கண்காணிக்கும் வகையில் வசதி செய்துள்ளனர்.
அதுபோல தற்போது மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள, கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கின்றனர்.
Next Story






