என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    ஈரோட்டில் இன்று மாலை அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

    பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை (17-ந்தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்ணாமலை


    பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.

    அவர் வில்லரசம்பட்டி, ரங்கம்பாளையம், கொல்லம்பாளையம் பைபாஸ், பிரப் ரோடு, விநாயகர் கோவில், லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம், கனிராவுத்தர் குளம், 60 அடி ரோடு, கொங்கம்பாளையம் ரோடு, ராயப்பாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் இன்று மாலை ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    அவர் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே, ஹோட்டல் சிம்னி அருகே திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்கிறார்.

    Next Story
    ×