என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீதிமன்றம்
4½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை
கூடலூர் அருகே 4½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாற்றுத்திறனாளிக்க 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஊட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 52). மாற்றுத்திறனாளியான இவர் திருமணம் ஆனவர். கூலித்தொழிலாளி.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி அப்பாஸ், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியை தனியாக அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அழுதபடி சென்ற அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினாள். புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் அப்பாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட அப்பாசுக்கு சிறுமியை கடத்தி சென்றதற்கு 10 ஆண்டுகள், அறையில் அடைத்து துன்புறுத்தியதற்கு ஒரு ஆண்டு, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 பிரிவுகளுக்கு 20 மற்றும் 7 ஆண்டுகள் என மொத்தம் 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதேபோல 3 பிரிவுகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், அப்பாசுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தண்ட னையை அப்பாஸ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறி உள்ளதால் இதில் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதாடிய போக்சோ சிறப்பு வக்கீல் செந்தில் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 52). மாற்றுத்திறனாளியான இவர் திருமணம் ஆனவர். கூலித்தொழிலாளி.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி அப்பாஸ், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4½ வயது சிறுமியை தனியாக அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அழுதபடி சென்ற அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினாள். புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் அப்பாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட அப்பாசுக்கு சிறுமியை கடத்தி சென்றதற்கு 10 ஆண்டுகள், அறையில் அடைத்து துன்புறுத்தியதற்கு ஒரு ஆண்டு, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 பிரிவுகளுக்கு 20 மற்றும் 7 ஆண்டுகள் என மொத்தம் 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதேபோல 3 பிரிவுகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், அப்பாசுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தண்ட னையை அப்பாஸ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறி உள்ளதால் இதில் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதாடிய போக்சோ சிறப்பு வக்கீல் செந்தில் தெரிவித்தார்.
Next Story






