என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுக்கடைகள்
டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் 4 நாட்கள் மூடப்படுகின்றன.
மதுரை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் 4 நாட்கள் மூடப்படுகின்றன. இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:&
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக வருகிற 17ந்தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.
இந்த நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






