என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமான வரி சோதனை
    X
    வருமான வரி சோதனை

    கடலூரில் வருமான வரித்துறையினர் அதிரடி: நகைக்கடைகள்- உரிமையாளர் வீடுகளில் சோதனை

    பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் லாரன்ஸ் சாலையில் பிரபல நகைக்கடைகள் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நகை கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகள் மூடப்பட்டது. முன்னதாக இன்று காலை வழக்கம்போல் லாரன்ஸ் சாலை மற்றும் திருவந்திபுரம் சாலையில் கடைகள் திறந்திருந்தன.

    வருமான வரித்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டபோது அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கடைகளில் வெளிப்புறத்தில் இரும்பு கதவுகளை கொண்டு மூடப்பட்டதோடு, ஒரு சில கடைகளில் துணிகளை கொண்டு அவசர அவசரமாக மூடியதும் காணமுடிந்தது.

    மேலும் வெளி நபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. கடையின் உரிமையாளர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×