என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்
    X
    பெண்

    தாலியை கழற்றி வைத்துவிட்டு சென்னை புதுப்பெண் ஓட்டம்

    வெம்பாக்கம் அருகே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் வீட்டை விட்டு சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சீம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது33). சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    சென்னை அருகே உள்ள பூந்தமல்லி அடுத்த அரண்வாயன் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (24), இருவருக்கும் கடந்த 6-ந்தேதி திருமணம் நடந்தது.

    நேற்று காலை யுவராஜ் கம்பெனி வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் பகல் 3 மணி அளவில் யுவராஜின் அண்ணன் லோகநாதன் யுவராஜிக்கு போன் செய்து உன்னுடைய மனைவியை காணவில்லை என்று தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக யுவராஜ் வீட்டிற்கு வந்தார். மனைவியை தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. வீட்டில் ஒரு கடிதம் இருந்தது.

    அதில் எனக்கு இந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அருகில் தாலி செயினும் இருந்தது. கடிதம் எழுதிவிட்டு தாலியை கழற்றி வைத்து விட்டு ஜெயஸ்ரீ வீட்டை விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து யுவராஜ் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×