என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு - 19ந்தேதி பொது விடுமுறை
திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந்தேதி நடக்கிறது.
அனைவரும் ஓட்டுப்போட ஏதுவாக ஓட்டுப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். ஓட்டுப்பதிவு நாளான வருகிற19-ந்தேதி பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
வாரச்சம்பள நாளில் ஓட்டுப்பதிவு நடப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வாரம் வருகிற 18-ந் தேதியே சம்பளம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டு உள்ளன.
Next Story






