என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காதலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் சிறுவர் பூங்காவுக்கு சென்றனர்.
    X
    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காதலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் சிறுவர் பூங்காவுக்கு சென்றனர்.

    வ.உ.சி. சிறுவர் பூங்கா, பவானிசாகர், கொடிவேரியில் குவிந்த காதல் ஜோடிகள்

    காதலர் தினத்தை யொட்டி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பார்க், மற்றும் சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் குவிந் தனர். அவர்கள் ஒருவருக் கொருவர் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
    ஈரோடு:

    காதலர் தினத்தை யொட்டி  இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பார்க், மற்றும் சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் குவிந் தனர். அவர்கள் ஒருவருக் கொருவர் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள வ உ சி பூங்கா ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று களைகட்டும். 

    இந்த நாளில் ஏராளமான காதல் ஜோடிகள் வ.உ.சி பூங்காவுக்கு படையெடுத்து வருவார்கள். இதேபோல் புதிதாக திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகளும் அதிக அளவில் வருவார்கள். 

    அவர்கள்  பூங்காவிற்கு வந்து உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். இதே போன்று இந்த ஆண்டும் வ. உ. சி பூங்காவுக்கு காதலர்கள் வந்தனர். 

    ஆனால் இந்த ஆண்டு வ. உ. சி பூங்காவில் காதலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வ. உ. சி பூங்கா நுழைவாயிலில் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் காதலர்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். 

    ஆனால் அதே நேரம் அதே பகுதியில் உள்ள  சிறுவர்களுக்கான பூங்கா வழக்கம்போல் செயல்பட்டது. 

    இதில் சில காதல் ஜோடிகள் சென்று பொழுதைக் கழித்தனர். இன்னும் சில காதல் ஜோடிகள் ஈரோடு பஸ் நிலையத்திலும்,  சில காதல் ஜோடிகள் சினிமா தியேட்டருக்கு சென்றும்  காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். 

    ஈரோட்டில் இன்று ரோஜா பூ விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக ஸ்டிக் ரோஜா  (பிரொபோஸ் ரோஜா) அதிக அளவில் விற்பனைக்கு நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். 

    ஸ்டிக் ரோஜா ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. சாதாரண ரோஜா ஒன்று ரூ.10- க்கு விற்பனையானது. கலர் ரோஜா கிலோ ரூ. 200 வரை விற்பனையானது.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை காதலர்கள் குறைந்த அளவே வந்தனர். 

    ஆனால் நேரம் செல்ல செல்ல இளை ஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் தங்கள் காதலர்களுடன் வர தொடங்கினர். அவர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்து கூறினர்.  

    தொடர்ந்து அவர்கள்  பூங்காவில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த பரிசு பொருட்களை பரிமாறி கொண்டனர்.இதையடுத்து காதல் ஜோடியினர் பூங்காவை கண்டு களித்து ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் காதலர்கள் அணை பகுதிக்கு சென்று கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர். 

    பெரும்பாலான காதலர்கள் மோட்டார் சைக் கிளிலேயே வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    பூங்காவுக்கு வந்தவர்கள் முக கவசம் அணிந்த பிறகே  சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை கடந்த 2 மாதங் களுக்கு பிறகு நேற்று முதல் பொது மக்கள் குளிக்கவும், கண்டு ரசிக்கவும் அனுமதிக் கப்பட்டனர்.

    இதையடுத்து காதலர் தினத்தையொட்டி இன்று கொடிவேரி அணைக்கு காதல் ஜோடிகள் பலர் வந்தனர். அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர். தொடர்ந்து காதல் ஜோடிகள் சிலர் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் திருமணமான பலரும் கொடிவேரி தடுப் பணைக்கு வந்து அணையில் குளித்தனர். இதையடுத்து அவர்கள் காதலர் பரிசுகளை பரிமாறி கொண்டனர். 

    காதல் ஜோடிகள் பலர் அந்த பகுதியில் விற்பனை செய்த மீன்களை ருசித்து சாப்பிட்டனர். 

    இதே போல் திண்டல் மலைப்பகுதியில் காதலர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவில் பின் வாசல் வழியாக சென்று இயற்கை அழதை ரசித்து சென்றனர்.

    மேலும் பவானி அருகே லட்சுமி நகர் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு தனி யார் பார்க்கில் காதலர் கள் குவிந்து ஒருவருக் கொருவர்  பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
    Next Story
    ×