search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19&ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில்  மாநகராட்சியில் 352 பேரும், 4 நகராட்சிகளில் 453 பேரும், 42 பேரூராட்சிகளில் 1919 பேர் என 771 பதவிகளுக்கு 2724 பேர் போட்டியில் உள்ளனர். 

    வாக்குபதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வாக்காளர்க ளுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

    அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் விநியோகித்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இப்பணியில் 20 சதவீத பூத் சிலிப் விநியோகிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், வயது, முகவரி, பாகம் எண், வரிசை எண், வாக்களிக்க வேண்டிய மையம் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் வாக்குசாவடிக்கு செல்லும் போது, வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை தவிர 11 வகையான ஆவணங்கள் கொண்டு செல்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதிக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் முழுமையாக வழங்கி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×