என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
இன்று காதலர் தினம்- நீலகிரி சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்
காதலர் தினத்தால் ஊட்டியில் உள்ள மலர் விற்பனை நிலையங்கள், கிப்ட் ஷாப்கள் அனைத்திலும் காதல் ஜோடிகளாகவே தென்பட்டனர். சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகளே இருந்தனர்.
ஊட்டி:
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு நேற்று முதலே காதல் ஜோடிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஊட்டியில் உள்ள ஓட்டல்களில் தங்கினர். ஓட்டல்களுக்கு வந்த காதல் ஜோடிகளை ஓட்டல் நிர்வாகத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இன்று காலை காதல்ஜோடியினர் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்தனர்.
பின்னர் புல்வெளியில் அமர்ந்து மனம் விட்டு பேசி ஒருவருக்கொருவர் காதலர் தின பரிசாக ரோஜா பூ, பல்வேறு பரிசு பொருட்களையும் மாறி மாறி வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்கார படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் ஜோடியாக படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
காதலர் தினத்தால் ஊட்டியில் உள்ள மலர் விற்பனை நிலையங்கள், கிப்ட் ஷாப்கள் அனைத்திலும் காதல் ஜோடிகளாகவே தென்பட்டனர். சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகளே இருந்தனர்.
காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இருக்கவும், அதே சமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்
போலீசார் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காதல் ஜோடிகளை தொந்தரவு செய்பவர்களையும், அத்துமீறும் காதல்ஜோடிகளையும் எச்சரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு நேற்று முதலே காதல் ஜோடிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஊட்டியில் உள்ள ஓட்டல்களில் தங்கினர். ஓட்டல்களுக்கு வந்த காதல் ஜோடிகளை ஓட்டல் நிர்வாகத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இன்று காலை காதல்ஜோடியினர் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்தனர்.
பின்னர் புல்வெளியில் அமர்ந்து மனம் விட்டு பேசி ஒருவருக்கொருவர் காதலர் தின பரிசாக ரோஜா பூ, பல்வேறு பரிசு பொருட்களையும் மாறி மாறி வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்கார படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் ஜோடியாக படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
காதலர் தினத்தால் ஊட்டியில் உள்ள மலர் விற்பனை நிலையங்கள், கிப்ட் ஷாப்கள் அனைத்திலும் காதல் ஜோடிகளாகவே தென்பட்டனர். சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகளே இருந்தனர்.
காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இருக்கவும், அதே சமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்
போலீசார் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காதல் ஜோடிகளை தொந்தரவு செய்பவர்களையும், அத்துமீறும் காதல்ஜோடிகளையும் எச்சரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Next Story






