என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது.
வேதங்கள் பூஜைசெய்து மூடி கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புமிக்க கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த மாதம் 29&ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது.
இதில் யாழ்ப்பாணம் பரணி ஆதீனம் சிவந்திநாத பண்டாரசன்னிதி, ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Next Story






