என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்திய மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீசார்.
10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
குத்தாலம் அருகே 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் சப்&இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (வயது 36) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது 2 கிலோ எடையுள்ள 5 பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார் அதனை சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் மணிகண்டனை குத்தாலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, நிலைய ஆய்வாளர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story






