என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
22-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்12 Feb 2022 1:37 PM GMT (Updated: 12 Feb 2022 1:37 PM GMT)
மதுரை மாவட்டத்தில் 22-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 22-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கியூ வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் 1016 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நேர நிலவரப்படி 7,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வருகை சற்று குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும் சுகாதார ஊழியர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 86 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 55 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டு உள்ளது.” என்று தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X